×

இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் வழக்கு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த மாதம் 19ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி சென்னையைச் சேர்ந்த மாலினி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், முன்பு விடுமுறை நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள், தற்போது வேலை நாட்களில் போராடுவதால் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டு இறுதி தேர்வு நெருங்கியுள்ள நிலையில் ஆசிரியர் போராட்டத்துக்கு தீர்வு காண அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர்கள் போராட்டம் கடந்த 8ம் தேதி வாபஸ் பெறப்பட்டு விட்டதாக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

The post இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் வழக்கு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Malini ,Court ,Dinakaran ,
× RELATED குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால்,...